யாழில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த நபரை மடக்கி பிடித்த பொலிஸார்!

யாழ்.பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளார்.

இக்கைது சம்பவம் யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (29-12-2021) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தையல் இயந்திரம் என்பன களவாடப்பட்டது.

கைது செய்யப்பட்ட கடை ஒன்றில் தையல் இயந்திரத்தை களவாடிச் சென்றபோது சி.சி.ரி.வி கமராவில் சந்தேக நபரின் காணொளி பதிவாகியது.

இந்நிலையில் களவாடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காக நகரப்பகுதிகளில் குறித்த நபர் சென்றிருந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முட்படுத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெத்து வருகின்றனர்.