கசூரினா கடலில் நீராடிய மாணவனை அலை அடித்து சென்றது….!

கசூரினா கடலில் நீராடி கொண்டிருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவனான 17 வயதுடைய யோகராசா லோகீஸ்வரன் எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது, கோண்டாவிலிருந்து, புத்தாண்டு தினமான இன்றைய தினம், 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் நீராடிக் கொண்டிருந்த நிலையில, இரண்டு பேரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதனைப் பார்த்த ஏனையவர்கள், அவலக்குரல் எழுப்பியதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஒருவரை மீட்டனர்.

மற்றமொரு நபர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சுமார் 4மணி நேர தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.