இலங்கையில் 15 ஆயிரம் ஹோட்டல்கள் மூடல்!

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இத்தகவலை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கின்றபோதிலும் அவை அவர்களது நாளாந்த தேவைக்கு பற்றாக்குறையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஹோட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.