மனைவி கண்டித்ததால் மன விரக்தியடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார்.

போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மாரியப்பன் கடந்த சில மாதங்களாக புகைப்பழக்கம் மற்றும் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மது பழக்கத்தை விடுமாடு கூறியுள்ளனர்.

இந்த மது பழக்கத்தை கைவிட முடியாமல் விரக்தியடைந்த மாரியப்பன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போடி டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாரியப்பன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.