இலங்கையில் மீண்டும் ஏற்படவுள்ள பேராபத்து! எச்சரிக்கை தகவல்…!

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம (Ananda Wijewickrama) எச்சரித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (13-01-2022) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது. நாட்டின் பல பகுதிகளில் Omicron திரிபுடனான கொrரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.Omicron வைரஸ் மிக இலகுவாக பரவக்கூடியது. அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு ஓமிக்ரோன் தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.