கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை இரத்தினக்கல்!!

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள நீல நிற இரத்திக்கல் உலகின் மிகப்பெரிய சபையர் இரத்தினக்கல் கொத்து என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது சுவிட்ஸர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரத்தினக்கல் கொத்து, அதிக லாபத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் உள்ள Gübelin Gem Lab இதனை நட்சத்திர இரத்தினக்கல் என சான்றளித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இரத்தினபுரி பகுதியில் கடந்த ஆண்டு இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் காரட் எடையுள்ள இந்த கொத்து செரண்டிபிட்டி என்று அழைக்கப்படுகிறது.