கொழும்பில் இடிந்து விழுந்த இரு மாடிக் கட்டிடம்

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவனும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இருவரும் மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.