தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளதுடன் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஷகீலா தனுஷ்-ஐஸ்வர்யா தொடர்பில் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

“தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பெரிதாக பேசி வருகிறார்கள். இந்த விஷயம் தான் இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியமா ? அவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள் ? என்று கேள்வி கேட்கிறீர்கள் முதலில் உங்களுடைய பிள்ளைகளை வளர்ப்பது பற்றி யோசியுங்கள் என தாறுமாறாக சாடியுள்ளார்.அத்துடன் அடுத்தவர்களுடைய வாழ்க்கை பிரச்சனை பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசாதீர்கள்.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் ? என்பதை உணருங்கள் என்றும் கூறிய நடிகை க்ஷகீலா, ஒரு அப்பாவாக ரஜினியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பேசுங்க” என இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பரபரப்பாக பேசப்பட்ட தனுஷ்-ஐஸ்வர்யா பிரிதொடர்பில் , தற்போது நடிகை க்ஷகீலாவின் கருத்து பதிவு தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.