இளைஞன் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்!

இளைஞன் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் தம்பதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞன் தனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததால் தாம் தாக்குதலை மேற்கொண்டதாக கைதான சந்தேகநபர்கள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.