புத்தளத்தில் நேருக்கு நேர் மோதிய வாகங்கள்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்!


புத்தளத்தில், லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் புத்தளம் கல்லடி பகுதியில், நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை (23-01-2022) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த நபர் சிராம்பையடி சின்ன நாகவில்லு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

குருணாகலில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் கல்லடி பகுதியிலிருந்து ஆனமடுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டதுடன் லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.