முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்; கிணற்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.