மட்டக்களப்பு பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….!


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று காலை முச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மட்டு ரயில்நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்திவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் இருந்து வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை 4 வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பயணி ஒருவரை ஏற்றிச் சென்ற நிலையில்,  பார்வீதி உப்போடையில் வீதியில் காலை 6 மணிக்கு முச்சக்கரவண்டி சேதமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதன் அருகே மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமைய பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.