கொத்மலை பூனாஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!



கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (28-01-2022) காலை11.45 மணியளவில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓயாவில் சடலம் ஒன்று இருப்பதை கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஓயாவில் எரிந்து சென்றார்களா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் சுமார் 40 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.