திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை!



கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் இன்று (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருகோணமலை கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை 15 முதல் 20 வயது கொண்டதாக இருக்கலாம் எனவும், கால்நடை வைத்தியரின் தலையீட்டில் யானையின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் வனஜீவராசி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

யானை உயிரிழந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்