யாழ் கடற்கரையில் கரையொதுங்கும் மர்மச் சடலங்கள்!

யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடமராட்சி மற்றும் தீவகம் கடற்கரை பகுதிகளில் ஆறு உடல்கள் கரை ஒதுங்கியிருந்தன.

இவ்வாறு கரையொதுங்கிய சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த இரு மாதங்களாக வைத்தியசாலையின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த்து.

இந்நிலையில் அவற்றில் 4 உடல்கள் பருத்தித்துறை நீதிமன்ற அனுமதியின் பெயரில் தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உயிரிழந்த அனைவரும் 40 தொடக்கம் 50 வயதுவரை இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் ஒருவரது வலது கையில் சிவலிங்கம் பச்சை குற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் மூலம் உரியவரை அடையாளம் காண முடியுமா என்பதற்காக பொலிசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறந்தவர்களது மேலதிக பரிசோதனைகளிற்காக எலும்பு மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.