கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி : வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!



அரியலூர் மாவட்டம் ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் இவருக்கு லட்சுமி என்ற மகளும் குணசேகரன் என்ற மகனும் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்
கடந்த 2007-ஆம் ஆண்டு செந்தாமரைஎன்பவரதுகொலைவழக்கில்குணசேகரன் மற்றும் அவரது உறவினர் சங்கர்என்பவர் மீது காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்தனர்
இந்நிலையில் இக்கொலைவழக்கில் தீர்ப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி வழங்கப்பட்டபோது இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் குணசேகரன் ஆஜராகவில்லை.

இதனையடுத்து குணசேகரனின் சகோதரி  லஷ்மி பல இடங்களில் தேடியும் குணசேகரனை தொடர்பு கொள்ளவோ பார்க்கவோ முடியாததால் இது குறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் தனது தம்பியை பல ஆண்டுகளாக தேடியும் காணவில்லை அவரது மனைவியான ஜெயந்தியிடம் கேட்டபோது  கேரளாவில் இருப்பதாகவும் அவ்வப்போது போனில் தொடர்பு கொள்வதாகவும் கூறினார்.

ஆனால் குணசேகரனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. அதனால் எனது தம்பியை கண்டுபிடித்து தருமாறு புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் தனிப்படை அமைத்து குணசேகரன் மனைவி ஜெயந்தியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் குண்சேகரனின் மனைவி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், சிறிது காலம் கழித்து மீண்டும் கிடுக்குபிடி குணசேகரின் மனைவியிடம் மீண்டும் கிடுக்குபிடி விசாரணை செய்தனர். அதில்  தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் தள்ளிவிட்டபோது தலையில் அடிபட்டு இறந்து விட்டார். என கூறியுள்ளார்.

மேலும் தனது சகோதரி ஜோதி, தந்தை மகாராஜன் ஆகியோர் துணையுடன் இறந்த கணவரின் உடலை வீட்டிற்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும் , கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்களில் சிலர் ஆலோசனையின் பேரில் புதைத்த கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து எலும்புகளையும் எரித்து சாம்பலை ஏரி தண்ணீரில் கரைத்து விட்டதாகவும் அதன் பின் நிம்மதியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் குணசேகரணின் மனைவி ஜெயந்தி, தங்கை ஜோதி, தந்தை மகாராஜன்  ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.