ராஜபக்ச அரசாங்கத்தில் மற்றுமொரு முக்கியஸ்தர் இராஜினாமா!

ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இவ்வாறு பதவி விலகுவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எராஜ் பெர்னாண்டோ , ஐக்கிய தேசியக் கட்சியைச் ​சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில், கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.