வவுனியா செல்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளையதினம் வவுனியாவிற்கு செல்லவுள்ளார். வுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய விஜயம் செய்யவுள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது தரமுயர்த்தப்பட்டிருந்தது. இதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி வருகையினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.