திடீரென முடங்கிய டிவிட்டர் கணக்குகள்! அதிர்ச்சியடைந்த பல கோடி பயனாளர்கள்

டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதன்படி, தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது.

மேலும், இப்பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் நிலைமை சீராகி இயல்புக்கு வந்துவிட்டதாகவும் டிவிட்டரின் தொழில்நுட்பக் குழுவினர் அறிவித்துள்ளனர்.