யாழில் இடம்பெற்ற விபத்து: இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூளாயை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (19-02-2022) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.