சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்! திடுக்கிடும் சம்பவம்….!

சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சிவமொக்கா சுலேபைலு பகுதியில் நேற்று சனிக்கிழமை (19-02-2022) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் 22 வயதான சலீம் மற்றும் 22 வயதான அப்துல்லா என இருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் துங்கா நகர் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுலேபைலுவில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (19-02-2022) இரவு 10 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம் இளைஞர்கள் தவறாக நடத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை பார்த்த சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், இருவரையும் துரத்திச் சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த கொலைக் குற்றச்சாட்டில் முகமது தாதாபீர், அல்லா பக்ஷ் மற்றும் பலரை கைது செய்ததாக துங்கா நகர் பொலிஸார் தெரிவித்தனர்.