பதவி விலகும் ஜீவன் குமாரதுங்க; புதிய கட்சிக்கு தாவல்….!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் தான் வகித்து வந்த அனைத்து பதவிகலில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் உபத் தலைவர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தனது பதவி விலகலை எழுத்து மூலம் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை கட்சித் தலைவர்களின் இரட்டைக் கொள்கை தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .

இந்நிலையில் , தான் குமார வெல்கமவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாகவும் ஜீவன் குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.