வழமைக்கு திரும்பும் எரிவாயு விநியோகம்!



இன்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், எரிவாயு கொள்கலன்களுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை போதுமானளவு எரிவாயு இருப்பு இல்லாமை காரணமாக எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய நிறுவனங்கள் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.