யாழில் போதைபொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய பெண் உட்பட மூவர்!



யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிபுலம் – கலட்டி பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பனிப்புலம் – கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். வீட்டில் இருந்து 1 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் செய்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சுற்றிவளைப்பில் சங்கானை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் கொலன்னாவ – வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.