பங்களாதேஷிடம் கடன் கேட்கும் இலங்கை


இந்தியா , சீனாவை தொடர்ந்து பங்களாதேஷிடமிருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் (Abdul Momen) தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் கோரிக்கையை பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இலங்கை ஏற்கனவே சீனா மற்றும் இந்தியாவிடம் கடன்கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.