ஜனாதிபதியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் விரைந்த இராணுவம்!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும்,  சம்பவ இடத்தில் ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.