ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் தீவிரமடையும் போராட்டம்! கண்ணீர் புகை பிரயோகித்த பொலிஸார்


கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது அதனை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில்  தற்போது மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.