பெண்ணுக்கு பதிலாக ஆணுக்கு தாலி கட்டிய குடி போதை சாரதி


தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர், அவ்வப்போது அருகில் உள்ள டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதன்போது அங்கு 21வயதான இளைஞர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப் 1ம் தேதி இருவரும் மதுபானகடையில் குடி போதையில் இருவரும ஒரினச் சேர்க்கை திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

இதனையடுத்து இருவரும் குடிபோதையிலிருந்த நிலையில் அங்குள்ள ஜோகிநாத் கோவிலுக்கு சென்று 22 வயது ஆட்டோ டிரைவர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்த பின்னர் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து ஜோகிபேட் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு வந்த அந்த இளைஞர், ஆட்டோ டிரைவரின் பெற்றோரிடம் தங்கள் மகனுக்கும் தனக்கும் நடந்த திருமணம் குறித்து கூறி இனி தான் தனது கணவருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர் 21 வயது இளைஞருடன் சண்டை போட்டு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டதனால் அந்த இளைஞர் பொலிஸில் புகார் அளித்தார்.

இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய பொலிஸார், அதில் அந்த 21 வயது இளைஞர் தன்னை தனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தனக்கு வாழ வழியில்லை அதனால் இனி தான் தனியாக வாழ ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அதன்பின்னர் பின்னர் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனராம்