ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை
வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி
கொழும்பு காலிமுகத்திடலில்
முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம்
ஆறாவது நாளாகவும் இன்று
தொடர்கின்றது.
கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாக
இந்த ஆர்ப்பாட்டம் இடைவிடாது
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால்
தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதே இடத்தில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.