கொழும்பு ஆர்ப்பாட்ட களத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி



காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது 12 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து சிறுமி சிகிச்சைக்காக “கோடகோகம” என பெயரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், 24 மணிநேர சத்தியாகிரக போராட்டத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது