யாழில் புகையிரதம் மோதி இராணுவச் சிப்பாய் பலி


யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்தார். சமன்குமார என்ற சிப்பாயே உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.