துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகள் விடுத்த கோரிக்கை!


ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த நபரின் மகள், தனது தந்தையின் சார்பாக அனைத்து தரப்பிலிருந்தும் நீதியை எதிர்பார்ப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ரம்புக்கனையைச் சேர்ந்த 42 வயதான கே.டி.லக்ஷான் நேற்று ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகன், தனக்கு நிதி தேவையில்லை எனவும், இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் எனவும் கூறியுள்ளார்.