தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்லமுயன்ற 13 பேர் அதிரடியாக கைது

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரையில் காத்திருந்த நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் வதியும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ முடியாது தமிழ்நாட்டிற்கு அடைக்கலம்தேடி புறப்பட்டு, கடற்கரையில் காத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.