பிரதமர் மகிந்த இராஜினாமா தொடர்பில் வெளியான அறிவிப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு பிரதமரை நியமிக்க இடமளித்து மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர்.