இனி வரும் காலங்களில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரிசி ஆலை உரிமையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை நிறுத்தி இலங்கையில் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுமாறு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்கு முன்னர் சந்தையில் அரிசி என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கண்டறியுமாறும் நுகர்வோர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போதுள்ள அரிசி விலையை விட அதிக விலைக்கு அரிசிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளை மற்றும் நாட்டு அரிசி 200 ரூபாவிற்கும் ஒரு கிலோ வெள்ளை மற்றும் நாட்டு அரிசி 220 ரூபாவிற்கும் விற்பனை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று வெளியிட்டுள்ளது.

அரிசிக்கான அரசினால் வெளியிடப்பட்டுள்ள 11ஆவது வர்த்தமானி அறிவித்தல் இதுவாகும். மேலும், வர்த்தமானி அறிவித்தலில் உள்ளூர் அரிசிக்கு மாத்திரமே கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட அரிசியே சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது.

உள்ளூர் அரிசி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அடையாளம் காண்பது மிகவும் கடினமானது மற்றும் வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) விசாரணை அதிகாரிகளின் உதவியைப் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அரிசி ஆலை உரிமையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை நிறுத்துமாறும், இலங்கை நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுமாறும், வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்கு முன்னர் சந்தையில் அரிசி என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கண்டறியுமாறும் நுகர்வோர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.