யாழில் ஆங்கிலம் பேசியாதாக கூறி இளைஞன் ஒருவரை கொலை செய்த கும்பல்

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.

மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட பச்சைத் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை பற்றிய முழுமையான தொகுப்பு இது.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வல்லைவெளியில், இமையாணன் பகுதியில் அமைந்துள்ளது யாழ் பீச் ஹொட்டல். அங்கு 2ஆம் திகதி- திங்கட்கிழமை இரவு இளைஞன் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். மதுபான போத்தலால் குத்தப்பட்டதில் இளைஞன் உயிரிழந்தார்.