அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிற்கிடையே இடம்பெற்ற பதற்றம் : உடைத்து எறியப்படும் கூடாரங்கள்

அலரி மாளிகை முன்பு தற்போது கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது.

அரசாங்க ஆதரவாளர்களினால், அரசாங்கத்தை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரங்கள் உடைத்து எறியப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடங்களில் செய்தி சேகரிக்கும் மற்றும் காணொளி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரியவருகிறது. அப்பகுதியில் உடைக்கப்பட்ட கூடாரங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.