மகிந்த ஆதரவாளர்களின் பரிதாப நிலை! நள்ளிரவு தாண்டியும் நீருக்குள் உயிருக்காக போராட்டம்

கொழும்பில் நேற்றையதினம் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வாவியில் தூக்கி வீசப்பட்ட மகிந்த ஆதரவளார்கள் இன்னும் வாவிக்குள் இருந்து வெளியே வரவில்லை.

அது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. மேலும், வாவிக்குள் உறைந்த நிலையில் நடுங்கிக் கொண்டிருக்கும் மகிந்த ஆதரவாளர்களுக்கு அங்கிருப்பவர்கள் தேநீர் வழங்கியுள்ளனர்.

அமைதியான முறையில் கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிரான நடந்து வந்த போராட்டம் நேற்றைய தினம் மகிந்த ஆதரவாளர்கள் என்ற பெயரில் களமிறக்கப்பட்ட அடாவடி கும்பல்களால் சீர்குலைக்கப்பட்டது.

இதன் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கலவரங்கள் வெடித்து, பிரதமர் பதவி விலகி, முக்கிய பிரபலங்கள் வீடுகள் எரிக்கப்பட்டு, உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டு தமது ஆதங்கத்தை பொதுமக்கள் வெளிப்படுத்திய பல வரலாற்று சம்பவங்கள் நேற்றையதினத்தில் அரங்கேறியிருந்தன.

இந்த நிலையில் பொதுமக்களால் பேஹ்ர வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட மகிந்த ஆதரவாளர்கள் இதுவரை வெளியில் வராமல் நீருக்குள் உயிருக்கு போராடி வருகின்றனர்.