இலங்கையில் துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு அனுமதி!

நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டினுடைய பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.