கொழும்பு – அங்கொடைப் பகுதியில் இராணுவத்திரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் : வௌியான காணொளி

அங்கொடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கொடை சந்தியில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் நீர்கொழும்பு பகுதியிலும் இரு குழுக்களுக்கிடையில் வன்முறை வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீதும், கொள்ளையடிப்பவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.