அரசாங்கத்தைப் பொறுப்பேற்க நான் தயார் – சஜித்

புதிய அரசாங்கத்தை சில நிபந்தனைகளின் கீழ் பொறுப்பேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி முன்வைத்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு,

  1. குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.
  2. புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது.
  3. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்.
  4. பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.