நாட்டில் ஏற்படும் மின் தடையை உடனடியாக சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மின் தடைகளை சரிசெய்வதற்கு தேவையான வாகனங்களின் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.