மதுபான சாலைகள் பூட்டு! மதுவரி திணைக்களம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை , மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.