நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பே இதற்குக் காரணம்.

அதன்படி பாண் ஒரு இறாத்தலின் (450கிராம்) விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை திருத்தம் இன்று (19) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.