வவுனியா ஓமந்தையில் எரிபொருள் இனமையால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

வவுனியா ஓமந்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (21.05) இரவு 8.45 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்டத்தில் மூன்று எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்பட்டிருந்த போதிலும் 4ம் கட்டை மற்றும் இறம்பைக்குளம் ஆகிய எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிறைவடைந்துள்ளதுடன்,

ஒமந்தை ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது அங்கு இரவு 8.30 மணியளவில் பின்னர் எரிபொருள் வழங்க முடியாது என தெரிவித்து எரிபொருள் விநியோகத்தினை இடைநிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஏ9 வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஓமந்தை பொலிஸார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும்,

எரிபொருள் வழங்கும் வரை வீதினை விட்டு செல்வதில்லை என தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது.