அபாய கட்டத்தில் உள்ள சிம்புவின் தந்தை? மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கிய நடிகர் டி. ராஜேந்தர் பன்முகங்களை கொண்டவர்.இவர், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்தை காட்டியவர்.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் தந்தையான இவர் சமீபகாலாமாக மகன் திருமணம் குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், சிம்பு திருமணம் செய்து வைக்க வேண்டிய ஆசையில் பல வேலைகளை செய்து வந்துள்ளார். இதனிடையே, தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

மேலும், கடந்த 4 நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அவசர சிகிச்சை உள்ளதாக, மருத்துவர்கள் கூறியுள்ளதால், மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பிரபலங்கள் பலரும் டி ராஜேந்திரன் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.