யாழ்.பல்கலைக்கழகத்தில் பதவி உயர்த்தப்பட்ட இணைப்பேராசிரியர்

யாழ்.பல்கலைக்கழகத்தில் இணைபேராசிரியர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்

இந்நிகழ்வானது இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இடம்பெற்றுள்ளது

விஞ்ஞான பீடத்தின் தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பி.செவ்வேள் தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்படுவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த இணைப் பேராசிரியர் பி. செவ்வேளின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் படி, தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பி. செவ்வேள் தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.