யாழில் டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் பலி

யாழில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே ஆவார்.

கடந்த 08ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.