யாழில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட கொடூர செயல்

யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் கத்தியால் தாக்கப்பட்ட இருவர்
படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றிரவு (10) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காணோர் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.