திடீரென வெடித்த மதக்கலவரம் : பல பிரமுகர்களின் வீடுகள் இடிப்பு

முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களால் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளை இந்தியாவில் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலவர சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மே மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாமுகமது நபியைப் பற்றி இழிவாக பேசியிருந்தார். இந்தக் கருத்துக்கள் இந்திய முஸ்லீம்களை வெறுப்படைய செய்ததோடு, இஸ்லாமிய நாடுகளுக்கும் மேலான கோபத்தை ஏற்படுத்தியது.

கட்சியின் டெல்லி ஊடகப் பிரிவின் தலைவரான நவீன் குமார் ஜிண்டாலும், ஒரு ட்வீட்டில் தனது அவதூறான கருத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்ததற்காக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர்களின் கருத்துக்கள் – குறிப்பாக நுபுர் ஷர்மாவின் – சில மாநிலங்களில் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த வாரம் அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் வீடுகளை இடிக்க உத்தரவிட்டதாக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இடிக்கப்பட்டது ஜாவேத் அகமது என்ற அரசியல்வாதியின் வீடு என்று பிரபல ஆங்கில மொழி செய்தித்தாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அவரது மகள் அஃப்ரீன் பாத்திமா ஒரு முக்கிய முஸ்லிம் உரிமை ஆர்வலர். அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கற்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவரின் சொத்துகளும் இடிக்கப்பட்டன.

யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார், புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமையைத் தொடர்ந்து வரும், கட்டுக்கடங்காத கூறுகள் நினைவில் உள்ளன என்று கூறியுள்ளார்.

அதேவேளைமுஸ்லிம் பிரமுகர்களின் வீடுகள் இடிப்புக்கு பரவலாக கண்டனம் எழுந்துள்ளது.